MEDIA STATEMENT

மலேசியா  ஆசியான் நாடுகளின்  தலைமையை ஏற்கும் முன்  5ஜி தொலைத்தொடர்பு திட்டம் முன்னெடுக்கப்படம்

18 அக்டோபர் 2024, 11:56 AM
மலேசியா  ஆசியான் நாடுகளின்  தலைமையை ஏற்கும் முன்  5ஜி தொலைத்தொடர்பு திட்டம் முன்னெடுக்கப்படம்

கோலாலம்பூர்  அக் 18 ; 5 ஜி பயன்பாட்டை அரசாங்கம் தொடர்ந்து ஊக்குவிக்கும், குறிப்பாக பல்வேறு தொழில்களில் அதன் பயன்பாடுகள்  மேம்பட்டுவருகிறது, அது  மலேசியா 2025 ஆம் ஆண்டில் ஆசியான் தலைவராக பொறுப்பேற்பதற்குள் மேலும் வளர்ச்சியடையும் .

பிரதமர் டத்தோ டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்களவையில்  2025 பட்ஜெட் தாக்கல் செய்த போது, இரண்டாவது சிவப்பு 5 ஜி அறிமுகப் படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று அறிவித்தார்.

"இந்த முன்முயற்சி தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையின் போட்டித் திறனைத் தூண்டும் நோக்கத்தைக் கொண்டுள்ளது" என்று அவர் கூறினார்.

மலேசியர்களிடையே 5 ஜி பயன்பாடு அதிகமாக இருந்ததால் டிஜிட்டல் நேஷனல் பிஎச்டி யை ஒரு தனியார் நிறுவனம் கையகப்படுத்தப்படுத்தியுள்ளதாக   அன்வார் கூறினார்.

மேலும், மலேசியாவின் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையம் 120 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் பொதுப் பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், இராணுவ முகாம்கள் மற்றும் மாரா நிறுவனங்களில் இணைய அணுகலை மேம்படுத்த ஒப்புக் கொண்டுள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.