ஷா ஆலம், அக். 18- பூலாவ் இண்டா சுற்றுவட்டச் சாலை மற்றும் வட
கிள்ளான் துறைமுகச் சாலை ஆகியவற்றின் நிர்மாணிப்பு மற்று சீரமைப்பு
தொடர்பான அறிவிப்பை பிரதமர் 2025ஆம் ஆண்டு வரவு செலவுத்
திட்டத்தில் அறிவித்தார்.
அந்த திட்டம் சீராக மேற்கொள்ளப்படுவதையும் நாட்டின் சரக்கு
போக்குவரத்து துரித வளர்ச்சி காண்பதையும் உறுதி செய்யும் நோக்கில்
இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
தெரிவித்தார்.








