MEDIA STATEMENT

குளோபல் இக்வான்- நால்வரை மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்க  கோத்தா பாரு நீதிமன்றம் அனுமதி

25 செப்டெம்பர் 2024, 4:22 AM
குளோபல் இக்வான்- நால்வரை மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்க  கோத்தா பாரு நீதிமன்றம் அனுமதி

கோத்தா பாரு, செப். 25- ஜி.ஐ.எஸ்.பி. ஹோல்டிங்ஸ் சென். பெர்ஹாட் (ஜி..ஐ.எஸ்.பி.எச்.) நிறுவனத்துடன் தொடர்புடைய நான்கு ஆடவர்களை விசாரணைக்காக இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பதினைந்து முதல் 45 வயது வரையிலான அந்த நால்வரையும் தடுத்து வைப்பதற்கு அனுமதியை கோத்தா பாரு நீதிமன்ற மாஜிஸ்திரேட் அகமது ஷியாபிக் அஜியாட் நஸ்ரி வழங்கினார்.

அவர்கள் அனைவருக்கும் எதிராக 1984 ஆம் ஆண்டு அச்சு இயந்திர மற்றும் பிரசுரச் சட்டத்தின் 8(2)வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உள்நாட்டினரான அவர்கள் அனைவரும் இன்று காலை 8.40 மணியளவில் நீதிமன்றம் கொண்டு வரப்பட்டனர்.

பாலியல் பலாத்காரம் மற்றும் கட்டாய உடல் உழைப்பு சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டதாக நம்பப்படும் 402 சிறார்களை சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களிலுள்ள 20 சமூக நல இல்லங்களிலிருந்து போலீசார் கடந்த 11ஆம் தேதி மீட்டனர்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.