கோலாலம்பூர், செப்டம்பர் 22 - மலேசியாவின் முன்னேற்றத்தை வலுப்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் உயர் திறன்மிக்க தலைவர்களுக்கு பஞ்சம் ஏற்படாமலிருப்பதை உறுதிப்படுத்த அரசியல் கல்வியறிவு வலுப்படுத்தப்பட வேண்டும்.
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, இளம் தலைவர்கள் தங்களைச் சுற்றியுள்ள பிரச்சனைகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக மேலும் அதிக அரசியல் கல்வி அறிவு புகட்டும் சூழல்களை நாடு கொண்டிருக்க வேண்டும் என்கிறார்.
“நாடு, சமூகம் மற்றும் வருங்கால சந்ததியை பற்றிய சிந்தனைகளும், அவற்றை அலசி ஆராயும் பண்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
“மாற்றத்தைக் கொண்டுவர அவரவர் (பொருத்தமான) இடத்தை பயன்படுத்த வேண்டும், உதாரணமாக, நான், மந்திரி புசாராக, என் பாத்திரத்தில் என்னால் முடிந்ததை செய்கிறேன்.
நீங்கள் - ஒரு தாய், தந்தை, சமூகத்தில் ஒருவராக - உங்கள் மட்டத்தில் எது சிறந்தது, எது பொருத்தமானது, எது அனைவருக்கும் நன்மையோ, அதை செய்ய, அந்த மாற்றத்தை நோக்கி நம் முயற்சிகள் எடுக்க வேண்டும் " என்று நேற்று டத்தோ மந்திரி புசார் பாண்டோக் சியாசா சிறப்பு உரையாடல் அமர்வில் கேட்டுக்கொண்டார்.
"உதாரணமாக, இஸ்லாமிய அரசியல் அம்சத்தில், அது எவ்வளவு வெளிப்படையானது மற்றும் அரசியலில் அதை நடைமுறைப் படுத்துவதற்கான வரம்புகள் எங்கே உள்ளது."தலைமைக்கு, அரசியலமைப்பின் அடிப்படையில் சிந்திக்க கற்றுக் கொடுக்கும் ஒரு வழிகாட்டி வேண்டும் என்றார். இது நமது நாட்டின் அரசியலமைப்பைப் புரிந்துகொள்வதற்கு முக்கியமானது என் கண்களைத் திறந்தது," என்று அவர் கூறினார்.
அந்த உரையாடல் குறித்து கருத்து தெரிவித்த ஜோர்டான் யார்மோக் பல்கலைக்கழகம் பட்டதாரி நூருல் ஹூடா வேடின் 24, Pondok Siyasah ஒரு தேசிய-மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையானதை விவரிக்கும் கலமாக இருந்ததாக கூறினார்.
“தான் பல ஆண்டுகளாக வேறொரு நாட்டில் வாழ்ந்ததால், சில சமயங்களில் நம் தாய் நாட்டில் உள்ள உண்மை நிலைகளிலிருந்து விலகி நிற்பதால், சில சம்பவங்கள் ஒரு கலாச்சார அதிர்ச்சியாக இருப்பதை ஒப்புக்கொண்டார்.
"இம்மாதிரி நிகழ்ச்சியின் மூலம், தான் மீண்டும் தெளிவடைந்து வருவதை உணர்கிறேன், மேலும் ஒரு மலேசியர் என்ற எனது அடையாளத்தில் மேலும் அர்த்தத்தைக் காண்கிறேன்," என்று அவர் கூறினார்.
மிதவாத இஸ்லாமிய அரசியலில் கல்வியறிவைப் பரப்பும் அரசியல் கல்வித் திட்டங்களில் பொண்டோக் சியாசாவும் உள்ளது மற்றும் மலேசியாவில் உள்ள சூழ்நிலை யதார்த்தங்கள் உட்பட பண்டைய இஸ்லாமிய சிந்தனை மற்றும் சொற்பொழிவுகளுக்கு இடையிலான தொடர்புகளை விவரிக்க. கடந்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டம், தீவிரவாதத்தை நிவர்த்தி செய்வதற்கும், மலேசியச் சூழல்கள் இல்லாத இஸ்லாமிய அரசியல் நூல்களின் நேரடியான தாக்கத்தை தணித்து புரிதலைத் ஏற்படுத்துவதற்கான பாடத்திட்டங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது..








