“மக்கள் இயக்கத்தின் பயணம் 1998 ஆம் ஆண்டு கிளர்ந்து எழுந்ததை அடுத்து, 2004ல் பெர்மாத்தாங் பாவ் ஒரு தொகுதியை மட்டும் வைத்திருந்த கட்சி, பக்காத்தான் ராக்யாட்டின் வடிவமைப்பில் வழி மக்களின் எதிர்ப்பலைகளை ஒன்றாக திரட்டி , ஐந்து மாநிலங்களைக் கைப்பற்றும் அளவுக்கு வளர்ந்தது. அப்படிப்பட்ட சாதனையை 2008 ம் ஆண்டு பொதுத் தேர்தலில் சாதித்து காட்டியது.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறையில் இருந்தபோது, அவரது உடல் அந்த நேரத்தில் நம்முடன் இல்லாவிட்டாலும், அவருடன் போராட்டம் எப்படி ஐக்கியப்பட முடியும் என்பதைக் காட்டியது.
"வெற்றியை நோக்கி ஒரே மனப்பான்மையுடன் மக்கள் பலத்தை ஒன்றிணைக்க அன்வார் எப்பொழுதும் பாடுபடுகிறார் என்பதுதான் உண்மை. ஆனால் வெற்றி எங்களிடமிருந்து வெகு தொலைவில் உள்ளது, பேராக் மற்றும் கெடா மீண்டும் வீழ்ந்தது, ஆனால் நாங்கள் என்றும் போராட்டத்திற்கு தயாராக இருக்கிறோம்," என்று ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
இதற்கிடையில், செமலாயன் டாக்சி கூட்டமைப்பின் தலைவரும் பிரதமரின் போராட்டத்தின் ஆரம்ப நாட்களில் பங்கு எடுத்துக் கொண்டவர், அன்றைய தலைவர் அன்வார் தாக்கப்பட்டது மற்றும் சிறையில் அடைக்கப்பட்டது, அவரின் போராட்ட மற்றும் அர்பணிப்பின் பிரதிபலிப்பாக விளங்குகிறது இன்றைய கெ அடிலான் என்றார்.
அன்வாரின் போராட்டத்தை ஆதரிப்பதற்காக அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், சீர்திருத்தங்களை ஒன்று திரட்டுவதற்காக பயணிகளை இலக்காகக் கொண்டதாகவும் கமாருதீன் ஹுசைன் கூறினார்.
"அன்வாருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை தாமத படுத்துவதற்காக, வாகனங்கள் மற்றும் டாக்சிகளை (டத்தாரான் மெர்டேகாவில்) மெதுவாகச் செலுத்தும் இடைஞ்சலை நாங்கள் மேற்கொண்டோம். இதில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.








