MEDIA STATEMENT

உலு திராம் சம்பவத்தில் கொல்லப்பட்ட போலீஸ்காரரை அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார்

7 செப்டெம்பர் 2024, 3:38 AM
உலு திராம் சம்பவத்தில் கொல்லப்பட்ட போலீஸ்காரரை அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார்

ஈப்போ, செப்டம்பர் 7: கடந்த மே மாதம் ஜொகூரில் உள்ள உலு திராம் காவல் நிலையத்தில் துப்பாக்கி சூடு சம்பவத்தில் கொல்லப்பட்ட காவலர்களுக்கு எதிராக  சமூக ஊடகங்கள் (முகநூல்) மூலம் அவதூறான கருத்துக்களை அனுப்பிய உள்ளூர் நபரை போலீசார் கைது செய்தனர்.

ஆகஸ்ட் 29 அன்று கான்ஸ்டபிள் அஹ்மத் அஸ்ஸா ஃபஹ்மி அசாரின் உறவினர்களிடமிருந்து அவதூறு குற்றச்சாட்டுகள் குறித்து தனது தரப்புக்கு புகார் கிடைத்ததாக தாப்பா மாவட்ட காவல் துறைத் தலைவர் முகமது நைம் அஸ்னாவி கூறினார்.

"அறிக்கையின் அடிப்படையில், தாப்பா மாவட்ட காவல்துறை தலைமையகத்தைச் சேர்ந்த போலீஸ் குழு, கடந்த வியாழன் இரவு 8 மணியளவில் ஜொகூரில் உள்ள மாசாயில் உள்ள ஒரு வீட்டில் கேள்விக்குரிய பேஸ்புக் கணக்கின் உரிமையாளரான 25 வயது இளைஞரைக் கைது செய்தது.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த சந்தேக நபரிடம் இருந்த கைத்தொலைபேசியை போலீசார்  பறிமுதல் செய்துள்ளனர்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு  500, தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 233 மற்றும் சிறு குற்றச் சட்டம் 2001 இன் பிரிவு 14 ஆகியவற்றின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேக நபர் நேற்று முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை நான்கு நாட்களுக்கு விசாரணைக்காக காவலில்  வைக்கப் பட்டதாக முகமட் நைம் கூறினார்.

மே 17 அன்று 21 வயது இளைஞன்  நடத்திய பாராங் மற்றும் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில், உலு திராம் காவல் நிலையத்தைச் சேர்ந்த இருவர்  கொல்லப்பட்டதுடன்,  தாக்குதல் நடத்திய 21 வயது இளைஞன்  சுட்டுக் கொல்லப்பட்டான்.

22 வயதான அஹ்மத் அஸ்ஸா ஃபஹ்மியைத் தவிர, இந்தச் சம்பவத்தில் முகமது சயாபிக் (24) என்பவரும் கொல்லப்பட்டார், அந்த நேரத்தில் அவர்கள் இருவரும்  கான்ஸ்டபிள் பதவியில் இருந்தார்கள். , மேலும்  அவர்களின்  மரணத்திற்குப் பின் ஜூன் 14 அன்று கார்போரலாக பதவி உயர்வு பெற்றனர்.

முன்னதாக, சமூக ஊடகங்களில் அனுப்பப்பட்ட ஒரு வைரலான கருத்தில், உலு திராம் காவல் நிலைய தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டி கருத்து எழுதியவர் 'வான் கய்யூம்' என்ற பெயரைப் பயன்படுத்தும் கணக்கு உரிமையாளர் சந்தேக நபர் என்று நம்பப்படுகிறது.

– பெர்னாமா

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.