ANTARABANGSA

புருணை சுல்தானுடன் நெருக்கமான நல்லுறவு இரு நாடுகளிடையே நட்பை வலுப்படுத்தும்- பிரதமர்

27 ஆகஸ்ட் 2024, 4:06 AM
புருணை சுல்தானுடன் நெருக்கமான நல்லுறவு இரு நாடுகளிடையே நட்பை வலுப்படுத்தும்- பிரதமர்

பண்டார் ஸ்ரீ பகவான், ஆக. 27- புருணை சுல்தான் ஹஸ்ஸனல்  போல்கியா உடனான தனிப்பட்ட அணுக்கமான நட்புறவு மிகவும் பொருள்  பொதிந்ததாக உள்ளதாகக் கூறிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மலேசியாவுக்கும் புருணைக்கும் இடையிலான உறவை மேலும்  வலுப்படுத்துவதற்கு இந்த நட்புறவை சரியான முறையில் பேணிக் காப்பது அவசியம் என்று வலியுறுத்தினார்.

சுல்தான் ஹஸ்ஸனல் போல்கியாவுடன் தாம் கொண்டுள்ள அணுக்கமான  உறவின்  வெளிப்பாடாகக் கடந்த 2022ஆம் ஆண்டு தாம் பிரதமராகப் பதவியேற்ற சில தினங்களுக்குப் பின்னர் எந்த அதிகாரப்பூர் அழைப்பு  இன்றி சுல்தான் கோலாலம்பூர் வந்தது கண்டு தாம் மனம் நெகிழ்ந்து  போனதாக அவர் சொன்னார்.

மலேசியா மற்றும் புருணை நாட்டுத் தலைவர்களின் தனிப்பட்ட முறையில் நெருக்கமான  உறவு அவ்விரு அண்டை நாடுகளுக்கிடையிலான அரச தந்திர உறவுகளை  மேலும் வலுப்படுத்துவதில்  பெரிதும் துணை புரியும் என அன்வார் குறிப்பிட்டார்.

இந்த மேம்பாட்டை நான் மிகவும் பிரத்தியேகமானதாகவும் பொருள்  பொதிந்ததாகவும் பார்க்கிறேன். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்துவதற்குப் புருணை தயாராக இருப்பதை இது காட்டுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக அவர் மலேசிய-புருணை 25ஆம் ஆண்டு தலைமைத்துவ  கலந்தாய்வு நிகழ்வில் கலந்து கொண்டு ஹஸ்ஸனல்  போல்கியா உடன் தனிப்பட்ட  சந்திப்பையும் நடத்தினார்.

டத்தோ ஸ்ரீ அன்வார் நாட்டின் பத்தாவது பிரதமராகக் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டதைத்  தொடர்ந்து சுல்தான் ஹஸ்ஸனல் போல்கியா அதே ஆண்டு நவம்பர்  28ஆம் தேதி மலேசியாவுக்கு வருகை புரிந்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.