ANTARABANGSA

போன்ஜர்! 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டி தனித்துவமான  முறையில் தொடங்கியது

27 ஜூலை 2024, 6:13 AM
போன்ஜர்! 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டி தனித்துவமான  முறையில் தொடங்கியது
போன்ஜர்! 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டி தனித்துவமான  முறையில் தொடங்கியது

பாரிஸ், ஜூலை 27: போன்ஜர் பாரிஸ்! கவர்ச்சிகரமான மற்றும் வரலாற்று பூர்வமாக, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், 2024 ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

1900 மற்றும் 1924 க்குப் பிறகு பாரிசில் நடந்த மூன்றாவது விளையாட்டுப் போட்டிகளில் சுமார் 10,500 விளையாட்டு வீரர்களின் 17 நாள் போட்டியின் துவக்கத்தைக் குறிக்கும் வகையில், டுயிலரீஸ் தோட்டத்தில் ஒரு சூடான காற்று பலூன் பற்ற வைக்கப்பட்டது.

பாரிஸ் நகரின் செயின் ஆற்றில் 2024 பாரிஸ் ஒலிம்பிக் பிரமாண்ட துவக்க விழா தொடங்கியது. சுமார் 100 படகுகளில் பல்வேறு நாடுகளின் வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பு துவங்கியது. ஒவ்வொரு படகிலும் மூன்று அல்லது நான்கு நாடுகளின் குழுக்கள் இடம் பெற்று இருந்தன. அவர்கள் தங்கள் தேசியக்கொடியை அசைத்தபடி சென்றனர்.

பொதுவாக பெரிய மைதானத்தில் நடத்தப்படும் ஒலிம்பிக் துவக்க விழா இந்த முறை பாரிஸ் செயின் ஆற்றில், திறந்த வெளியில் நடத்த முடிவு எடுக்கப்பட்ட நிலையில், தொடக்க விழாவின் போது மழை பெய்ததால் வீரர்கள் அனைவரும் நனைந்தபடி படகில் சென்றனர். மேலும், திறந்த வெளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கேற்ற கலைஞர்கள், அதைக் காண வந்திருந்த மக்கள் என அனைவரும் கொட்டும் மழையில் நனைந்தபடி இருந்தனர்.

2024 ஒலிம்பிக் துவக்க விழாவை காண ஆற்றங்கரையோரம் சுமார் 3,26,000 பார்வையாளர்களுக்கு டிக்கெட் விநியோகிக்கப் பட்டு இருக்கிறது. அதில் 222,000 டிக்கெட்கள் இலவசமாக கொடுக்கப் பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்களின் மாடிகளில் இருந்தும் மக்கள் இந்த படகு அணிவகுப்பை கண்டு களித்தனர். ஆற்றங்கரையின் பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மலேசியக் குழு

ஆறு தடகள வீரர்கள் மற்றும் நான்கு அதிகாரிகளால் பிரதிநிதித்துவப்படுத்த பட்ட மலேசியக் குழு, மலாவி மற்றும் மாலத்தீவுகளின் குழுவுடன், நீர்மூழ்கி வீரர், பெர்ட்ராண்ட் ரோடிக்ட் லிசஸ் மற்றும் படகோட்டம் தடகள வீரர் நூர் ஷாஸ்ரின் முகமட் லத்தீப் ஆகியோருடன் ஜாலுர் கெமிலாங் கைச் சுமக்கும் பொறுப்பை ஏற்று, படகு எண் 45 இல் பயணம் செய்தனர்.

பெர்ட்ராண்ட் மற்றும் நூர் ஷாஸ்ரின் ஆகியோருடன் நூர் தாபிதா சப்ரி (டைவிங்), கைருல் நிஜாம் முகமட் அஃபாண்டி (படகோட்டம்), ஆஷ்லே லாவ் (கோல்ஃப்) மற்றும் நீச்சல் வீரர் டான் ரூக்சின் ஆகியோரும் இணைந்தனர்.

.

மலேசிய  குழுவில், குழுவின் தலைவர் டத்தோ ஹமிடின் முகமட் அமீன், அவரது துணைத் தலைவர் டத்தோ நிகோல் டேவிட், குழுவின் மருத்துவ தலைவர் டாக்டர் ஜாஸ்மிசா குசைரி  ஜாஸ்மே மற்றும் அங் லி பெய் (மலேசிய ஒலிம்பிக் கவுன்சில் பாதுகாப்பு அதிகாரி) ஆகியோரும் இணைந்திருந்தனர்.

1956 மெல்போர்ன்  ஒலிம்பிக்  விளையாட்டுப் போட்டிகளில் அறிமுகமான மலேசியா, எட்டு வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது, பூப்பந்து ஆறு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களைக் கொடுத்துள்ளது.

திகைப்பூட்டும் இவ்விழா ஈபிள் கோபுரம் மற்றும் பாரிஸ் இரவு வானத்தை ஒளிரச் செய்யும் கண்கவர் லேசர் காட்சியுடன் முடிவடைந்தது.

அடுத்து  2028 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், ஒலிம்பிக் போட்டிகளை நடத்த உள்ளது.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.