ANTARABANGSA

ஹோட்டல் அறையில் அறுவரின் உடல்கள் மீட்பு- விசாரணை நடத்த தாய்லாந்து பிரதமர் உத்தரவு

17 ஜூலை 2024, 3:39 AM
ஹோட்டல் அறையில் அறுவரின் உடல்கள் மீட்பு- விசாரணை நடத்த தாய்லாந்து பிரதமர் உத்தரவு

பேங்காக், ஜூலை 17- ரட்சாப்பிராசோங்கில் உள்ள பிரசித்தி பெற்ற

ஹோட்டல் ஒன்றில் அறுவர் நேற்று இறந்து கிடக்கக் கண்டு

பிடிக்கப்பட்டனர். அந்த மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்களின்

மரணத்திற்கு நச்சுணவு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் இரு வியட்னாம் வம்சாவளி

அமெரிக்கர்கள் மற்றும் நான்கு வியட்னாமியர்கள் என அடையாளம்

காணப்பட்டது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக அறிக்கை வெளியிட்ட

தாய்லாந்து பிரதமர் ஷிரோத்தா தாவிஷின், இச்சம்பவம் தொடர்வில்

விரிவாகவும் விரைவாகவும் விசாரணை நடத்தும்படி அந்நாட்டு போலீஸ்

தலைவர் பொர்சாக் சுக்விமோலுக்கு உத்தரவிட்டதோடு பொது மக்கள்

மற்றும் சுற்றுப்பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்கள்

நிகழாதிருப்பதை உறுதி செய்ய அப்பகுதியை முழு கட்டுப்பாட்டில்

எடுத்துக் கொள்ளும்படி பணித்தார்.

இறந்தவர்களின் உடல்கள் நேற்று மாலை 4.30 மணியளவில் கண்டு

பிடிக்கப்பட்டதாக சம்பவ இடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது

ஷிரோத்தா கூறினார்.

அவர்கள் அனைவரும் 24 மணி நேரத்திற்கு முன்னர்

உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவித்த அவர்,

தாக்கப்பட்டதற்கான அல்லது கொள்ளையிடப்பட்டதற்கான அறிகுறி

தென்படாததால் அவர்கள் நச்சுணவு காரணமாக பலியாகியிருக்கலாம் என

நம்பப்படுகிறது என்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் இங்குள்ள வியட்னாம் அரச தந்திரிக்கு தாம்

விளக்கமளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த அறுவிரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்காக

போலீசார் சி.சி.டிவி. காட்சிகளையும் சோதித்து வருவதோடு

சாட்சிகளிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.