ANTARABANGSA

காஸாவில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 36,171ஆக உயர்வு

30 மே 2024, 2:28 AM
காஸாவில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 36,171ஆக உயர்வு

காஸா, மே 30- காஸா தீபகற்பம் மீது கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான தாக்குதல்களில் இறந்தவர்கள் பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 36,171 பேராக அதிகரித்துள்ளது.

இந்த கோரத் தாக்குதல்களில் மேலும் 81,420 பேர் காயமுற்றதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி பாலஸ்தீன செய்தி நிறுவனம் (வாஃபா) கூறியது.

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதல்களில் மேலும் 75 பேர் கொல்லப்பட்டு 284 பேர் காயமுற்றனர்.

பாதிக்கப்பட்ட இடங்களை மீட்பு பணியாளர்கள் சென்றடைய முடியாத நிலையில் மேலும் பலர் கட்டிட இடிபாடுகளிலும் சாலைகளில் சிக்கித் தவிக்கின்றனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.