ANTARABANGSA

உலுதிராம் காவல் நிலையத் தாக்குதல்- காயமடைந்த போலீஸ்காரர் வீடு திரும்ப அனுமதி

27 மே 2024, 7:10 AM
உலுதிராம் காவல் நிலையத் தாக்குதல்- காயமடைந்த போலீஸ்காரர் வீடு திரும்ப அனுமதி

ஜோகூர் பாரு, மே 27 - உலு திராம் காவல் நிலையம் மீது கடந்த மே 17ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் தோள்பட்டை மற்றும் இடுப்பில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான போலீஸ்காரர் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையிலிருந்து கடந்த  சனிக்கிழமை  வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்.

ஒன்பது நாட்கள் சிகிச்சைக்குப் பெற்ற பிறகு வீடு திரும்ப அனுமதிக்கப்பட்ட  முப்பத்தெட்டு வயது கார்ப்ரல் முகமது  ஹசிஃப் ரோஸ்லான் என்ற அந்த காவலர், தற்போது இரண்டு மாத  மருத்துவ விடுப்பில் இருந்து  வருவதாக ஸ்ரீ ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமது சோஹாய்மி இஷாக் தெரிவித்தார்.

இந்த சம்பவம் முகமது  ஹாசிப்பைபெரும்  அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும் அவர் மருத்துவமனையில் தங்கியிருந்த போது மனநல ஆலோசனையும் பெற்றார்.  தேவைப்பட்டால் அவருக்கு மேலும் ஆலோசக சேவை வழங்கப்படும் என  சோஹாய்மி சொன்னார்.

அவர் சீரான உடல்  நிலையில் இருக்கிறார். மேலும் ஊன்று கோலைப்  பயன்படுத்தாமல் அவரால்  நடக்க முடிகிறது. இருப்பினும், அடுத்த இரண்டு மாதங்களுக்கு அவர் வழக்கமான சிகிச்சையைப் பெறுவார் என்று அவர் சொன்னார்

ஜோகூர் காவல் படை தலைமையகத்தில் இன்று நடைபெற்ற மாநில அரசின் உதவிப் பொருள்களை  ஜோகூரின்  காவல்துறையிடம் ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஜோகூர் காவல்துறைத் தலைவர் சிபி எம் குமாரும் உடனிருந்தார்.

கடந்த மே 17ஆம் தேதி அதிகாலை 2.45 மணியளவில் காவல் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், கான்ஸ்டபிள் அகமது அஸ்ஸா ஃபாஹ்மி அசார்  (வயது 22), மற்றும் கான்ஸ்டபிள் முகமது ஷாபிக் அகமது சைட் (வயது 24), ஆகியோர்   முகமூடி அணிந்த  நபரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில்  ஹாசிப்  காயமடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக ஏழு நபர்கள் கடந்த மே 18 முதல் மே 24 வரை ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களில் ஐந்து பேர் குற்றவாளியின் குடும்ப உறுப்பினர்கள். மேலும் இருவர் சம்பவத்தின் போது அந்த காவல் நிலையத்தில் இருந்த மாணவர்களாவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.