கோலக்குபு பாரு 12 மே ;- கோலக் குபு பாரு பக்காத்தான் ஹராப்பான் வெற்றிக்கு அங்கு உள்ள வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி இது மக்கள் சேவைக்கும் ஒற்றுமை அரசாங்கம் பங்காளி கட்சிகளின் அணுக்கமான ஒத்துழைப்பு கிடைத்த வெற்றி எனக் குறிப்பிட்டார்.
கடந்த 14 நாட்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் மேற்கொண்ட கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் தன் நன்றியை தெரிவித்துக் கொண்டார். கோல குபு பாரு வாக்காளர்களின் நல்ல தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொண்டோம், மாநில அரசின் மக்கள் நலன் சேவைகள் தொடரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் மக்கள் சேவையைப் புதிய சட்டமன்ற உறுப்பினர் தொடர எல்லா வகையிலும் மாநில அரசு அவருக்கு உதவி புரியும் என்று கூறினார்.








