ANTARABANGSA

தைவான் நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழப்பு, 50க்கும் மேற்பட்டோர் காயம்

3 ஏப்ரல் 2024, 6:40 AM
தைவான் நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழப்பு, 50க்கும் மேற்பட்டோர் காயம்

மாஸ்கோ, ஏப் 3: தைவானின் கிழக்குக் கரையோரப் பகுதியில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று தைவானின் தீயணைப்புத் துறையை மேற்கோள்காட்டி ஸ்புட்னிக் இன்று செய்தி வெளியிட்டது.

இன்று கிழக்கு தைவானில் உள்ள ஹுவாலியன் கடற்கரையில் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 11-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவுகோலில் அவை 4க்கும் அதிகமானதாக இருந்ததாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இன்று தைவானில் பலத்த நிலநடுக்கம் பதிவாகியது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து 6.6 மற்றும் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக சமூக ஊடக பயனர்கள் X (ட்விட்டர்) செயலியில் ஒரு வீடியோவை வெளியிட்டனர். அதில் தைவானில் உள்ள பல கட்டிடங்கள் சாய்ந்து சேதமடைந்ததைக் காட்டுகிறது.

- பெர்னாமா-ஸ்புட்னிக்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.