ஃபேஸ்புக்கில் ஒரு பதிவில், பிரதமர் அன்வார் "மலேசியாவை பிரதிநித்து 2015ல் இறுதியாக டத்தோ நிக்கோல் டேவிட் அடைந்த சாதனையை மீண்டும் ஏற்படுத்தியதற்கு தனது பாராட்டை தெரிவித்துக் கொண்டதுடன், சிவசங்கரி தொடர்ந்து முன்னேற வேண்டும் ,"மீண்டும் ஒருமுறை, வாழ்த்துக்கள், மேலும் இந்த வெற்றி எதிர்காலத்தில் மேலும் வெற்றியை ஊக்குவிக்கட்டும்" என்று பிரதமர் எழுதியிருந்தார்.
பிரசித்தி பெற்ற தொழில்முறை ஸ்குவாஷ் அசோசியேஷன் (பிஎஸ்ஏ) உலக சுற்றுப்பயணத்தில் சாம்பியன் ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் மலேசிய வீராங்கனை என்ற பெருமையை அடைந்த அவர் லண்டன் கிளாசிக் அரையிறுதிக்கு ஏழு முறை உலக சாம்பியனான எகிப்து நாட்டின் நூரை கால் இறுதி போட்டியில் சிவசங்கரி திணறடித்தார் என்பதும் அனைவரும் அறிந்ததே !
நேற்று, சிவசங்கரி 108,500 அமெரிக்க டாலர்கள் லண்டன் கிளாசிக்கில் தனது முதல் தங்க-நிலை பிஎஸ்ஏ டூர் பட்டத்தை பெற்ற போது ஸ்குவாஷ் உலகிற்கு வந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார் என ஸ்குவாஷ் விளையாட்டு உலகம் கருதுகிறது .
81 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இறுதிப் போட்டியில் உலகின் 13- ம் நிலை வீராங்கனையான சிவசங்கரி 11-9, 5-11, 13-11, 12-14, 11-8 என்ற செட் கணக்கில் தனது உயர்நிலைப் பள்ளி வீராங்கனையான ஹனியா எல் ஹம்மாமியை வீழ்த்தினார்.








