ANTARABANGSA

தொடர் தாக்குதல்களில் குறைந்தது 31,341 பாலஸ்தீனியர்கள் இறந்துள்ளனர்

15 மார்ச் 2024, 4:39 AM
தொடர் தாக்குதல்களில் குறைந்தது 31,341 பாலஸ்தீனியர்கள் இறந்துள்ளனர்

காசா, மார்ச் 15: கடந்த அக்டோபர் மாதம் முதல் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களில் குறைந்தது 31,341 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக முற்றுகையிடப்பட்ட மாகாணத்தில் உள்ள சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

காயமடைந்த குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை 73,134 ஆக உயர்ந்துள்ளதாக அனடோலு ஏஜென்சி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

"கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 69 பேர் இறந்தனர் மற்றும் 110 பேர் காயமடைந்தனர்.

"பல குடியிருப்பாளர்கள் இன்னும் அழிக்கப்பட்ட கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது, ஏனெனில் மீட்பு படையினரால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலால் காசாவின் 85 சதவீத மக்கள் உணவு, சுத்தமான தண்ணீர் மற்றும் மருந்து பற்றாக்குறைக்கு மத்தியில் வீடற்றவர்களாக ஆக்கப் பட்டுள்ளனர். அதே நேரத்தில் 60 சதவீத உள்கட்டமைப்பு சேதமடைந்துள்ளது அல்லது அழிக்கப்பட்டுள்ளது.

-பெர்னாமா-அனடோலு

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.