ANTARABANGSA

அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்- இருவர் பலி

21 பிப்ரவரி 2024, 11:38 AM
அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்- இருவர் பலி

வாஷிங்டன், பிப் 21- காஸா தீபகற்பத்தில் எம்.எஸ்.எஃப். எனப்படும்

எல்லைகள் இல்லா மருத்துவர்கள் என்ற சமூக நல மருத்துவ

அமைப்பினால் நடத்தப்பட்டு வரும் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல்

நேற்று மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது இருவர்

கொல்லப்பட்டதோடு மேலும் அறுவர் காயங்களுக்குள்ளாயினர்.

அல்-மாவாசி, கான் யூனிசில் எம்.எஸ்.எஃப். பணியாளர்கள் மற்றும்

அவர்களின் குடும்பத்தினர் தங்கியிருக்கும் அந்த முகாம் மீது இஸ்ரேல்

தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பு தனது எக்ஸ் தளத்தில்

வெளியிட்ட பதிவில் கூறியது.

இந்த சம்பவம் குறித்து நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளோம் என்று

அந்த அமைப்பு கூறியதாக அனாடோலு ஏஜென்சி தெரிவித்தது.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி முதல் பாலஸ்தீனம் மீது

இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் இதுவரை 29,195 பேர்

உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல்கள் காரணமாக அங்கு அடிப்படை

வசதிகள் முற்றாக நிலைகுலைந்துள்ளதோடு உணவு உள்ளிட்ட அடிப்படை

தேவைகளுக்குக் கடும் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.