ANTARABANGSA

பாலஸ்தீனப் போரில் பலியானோர் எண்ணிக்கை 23,210ஆக உயர்வு- சுமார் 60,000 பேர் காயம்

11 ஜனவரி 2024, 3:47 AM
பாலஸ்தீனப் போரில் பலியானோர் எண்ணிக்கை 23,210ஆக உயர்வு- சுமார் 60,000 பேர் காயம்

காஸா சிட்டி, ஜன 11- காஸா தீபகற்பம் மீது இஸ்ரேலியப் படைகள்

கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் மேற்கொண்டு வரும் கோரத்

தாக்குதல்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை 23,210ஆக உயர்ந்துள்ளது.

இத்தாக்குதல்களில் மேலும் 59,167 பேர் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீன

சுகாகார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

கட்டிட இடிபாடுகளிலும் சாலைகளில் பெரும் எண்ணிக்கையிலானோர்

உதவிக்காக காத்திருப்பதாகவும் இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத

வான் மற்றும் தரைத் தாக்குதல்கள் காரணமாக ஆம்புலன்ஸ் வாகனங்கள்

அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அனாடோலு செய்தி

நிறுவனம் தெரிவித்தது.

இஸ்ரேலின் அந்த மூர்க்கத்தனமான தாக்குதல்கள் காரணமாக காஸாவில்

சுமார் 60 விழுக்காட்டு அடிப்படை வசதிகள் சீர்குலைந்துள்ளதோடு

கிட்டத்தட்ட இருபது லட்சம் பேர் குடியிருப்புகளை இழந்துள்ளனர்.

போருக்கு மத்தியில் மக்கள் உணவு, சுத்தமான குடிநீர் மற்றும்

மருந்துகளுக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.