ANTARABANGSA

இஸ்ரேல் தாக்குதல்- அக்டோபர் 7 முதல் 4,119 பள்ளி மாணவர்கள் பலி

3 ஜனவரி 2024, 3:29 AM
இஸ்ரேல் தாக்குதல்- அக்டோபர் 7 முதல் 4,119 பள்ளி மாணவர்கள் பலி

அங்காரா, ஜன 3 - கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி முதல்

காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இடைவிடாத தாக்குதல்கள்

காரணமாக பாலஸ்தீனத்தில் 4,119 பள்ளி மாணவர்கள்

உயிரிழந்துள்ளதோடு மேலும் 7,536 பேர் காயமடைந்துள்ளனர்.

இது தவிர கடந்த அக்டோபர் 7ஆம் தேதி போர் தொடங்கியது முதல்

மேற்கு கரையில் அடைக்கலம் நாடியவர்கள் மீது நடத்தப்பட்ட

தாக்குதல்களில் 37 மாணவர்கள் பலியான வேளையில் மேலும் 282 பேர்

காயங்களுக்குள்ளாயினர்.

மேலும், இந்த கோரத் தாக்குதல்கள் 221 ஆசிரியர்கள் மற்றும்

பணியாளர்கள் மரணமடைவதற்கும் 703 பேர் காயமடைவதற்கும்

காரணமாக அமைந்துள்ளது என்று பாலஸ்தீன கல்வி அமைச்சை

மேற்கோள் காட்டி வாஃபா நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

காஸா முனையில் 343 பள்ளிகளும் மேற்கு கரையில் 38 பள்ளிகளும்

இந்த போரில் நிர்மூலமானதாக அது தெரிவித்தது.

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி முதல் இஸ்ரேல் நடத்தி வரும்

தாக்குதல்களில் இதுவரை 21,978 பேர் உயிரிழந்துள்ளதோடு 57,697 பேர்

காயமுற்றுள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும்

சிறார்களாவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.