ANTARABANGSA

ஜப்பானில் 2 மணி நேரத்தில் 29 நிலநடுக்கங்கள்

2 ஜனவரி 2024, 2:58 AM
ஜப்பானில் 2 மணி நேரத்தில் 29 நிலநடுக்கங்கள்

டோக்கியோ, ஜன 2- ஜப்பானின் இஷிகாவா மற்றும் நிகாத்தா பகுதிகளில்  ரிக்டர் அளவில் 7.6 எனப் பதிவான  29 நிலநடுக்கங்கள் 2 மணி நேரத்தில் ஏற்பட்டதாக ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் ஆய்வு செய்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

பூமிக்கு அடியிலான  நடுக்கம் உள்ளூர் நேரப்படி மாலை 4.06 மணிக்கு ஏற்படத் தொடங்கியது. நில அதிர்வு காரணமாகக்  குறைந்தது ஆறு வீடுகள் இடிந்து விழுந்ததாக ஜப்பானின்  அமைச்சரவை தலைமைச் செயலாளர் யோஷிமாசா ஹயாஷி தெரிவித்தார்.

இதுவரை, ஆறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. கட்டிட  இடிபாடுகளுக்கு அடியில் மக்கள்  சிக்கியிருக்கக்கூடும் அஞ்சுகிறோம் என்று ஹயாஷி கூறினார்.

காயமடைந்தவர்கள் குறித்து அதிகாரிகளிடம் எந்த தகவலும் இல்லை என்றார் அவர்.

நிலநடுக்கம் காரணமாகச் சுமார் 100 கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகக் கூறும் ஜப்பானிய ஊடக அறிக்கைகள் குறித்து கருத்து கேட்டபோது, ஜப்பானிய அரசாங்கம் தகவலை உறுதி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக  ஹயாஷி கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.