ANTARABANGSA

இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 85 பாலஸ்தீன விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டனர்

15 டிசம்பர் 2023, 8:49 AM
இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 85 பாலஸ்தீன விளையாட்டு வீரர்கள்  கொல்லப்பட்டனர்

இஸ்தான்புல், டிச.15: அக்டோபர் 7 முதல் டிசம்பர் 6 வரை காசாவில் இஸ்ரேல் படைகள்

நடத்திய தாக்குதலில் குறைந்தது 85 பாலஸ்தீன விளையாட்டு வீரர்கள்

கொல்லப்பட்டனர்.

அவர்களின் இழப்பு விளையாட்டு துறைக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக

அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

இறந்தவர்களில் 55 கால்பந்து வீரர்கள் மற்றும் பிற விளையாட்டுகளை சேர்ந்த 30

விளையாட்டு வீரர்கள் ஆவர்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள், பாலஸ்தீன விளையாட்டு வீரர்கள் மற்றும்

விளையாட்டு வசதிகளையும் குறிவைத்தன, குறிப்பாகக் கால்பந்து வீரர்கள், கிளப்

தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் நடுவர்கள் ஆகியோர் ஆவர்.

இந்தத் தாக்குதலின் விளைவாக மேற்குக் கரையில் நான்கு மற்றும் காசாவில் ஐந்து என

மொத்தம் ஒன்பது விளையாட்டு வசதிகள் அழிக்கப்பட்டன.

மேலும், மேற்குக் கரையில் மூன்று விளையாட்டு வீரர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள

நிலையில் நான்கு விளையாட்டு வீரர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

– பெர்னாமா-அனடோலு ஏஜென்சி

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.