பந்திங், அக் 30 - சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்தின்
ஆதரவுடன சிலாங்கூர் தொழிலாளர் திறன் மேம்பாட்டுப் பிரிவு
யு.பி.பி.எஸ்.) ஏற்பாடு செய்த கோல லங்காட் மாவட்ட நிலையிலான
ஜெலாஜா ஜோப்கேர் எனும் வேலை வாய்ப்புச் சந்தையில் 254 பேர் பங்கு
கொண்டனர். யு.பி.பி.எஸ். மேற்கொண்டு வரும் வேலை வாய்ப்பு சந்தைத்
தொடரின் ஐந்தாவது நிகழ்வாக இது அமைந்துள்ளது.
இங்குள்ள ஸ்ரீ ஜூக்ரா மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்த
வேலை வாய்ப்புச் சந்தையை மனிதவளத் துறைக்கான மாநில
ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பராய்டு அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி
வைத்தார்.
இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் 99 ஸ்பீட்மார்ட், பிரசரானா உள்ளிட்ட
பிரசித்தி பெற்ற 26 நிறுவனங்கள் பங்கு கொண்டு 4,000 வேலை
வாய்ப்புகளை வழங்கின. இங்கு நடைபெற்ற வேலை வாய்ப்புக்கான
நேர்காணலில் 254 பேர் கலந்து கொண்டனர்.
அவர்களில் 27 பேருக்கு உடனடியாக வேலை கிடைத்த வேளையில்
மேலும் 165 பேர் இரண்டாம் கட்ட நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.
இந்த வேலை வாய்ப்புச் சந்தைக்கு பொது மக்கள் மத்தியில் கிடைத்த
ஆதரவுக்கு பாப்பாராய்டு நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்வு
சிறப்பாக நடைபெறுவதற்கு முழு ஆதரவு வழங்கிய கோல லங்காட்
நகராண்மைக் கழகத்திற்குப் பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான அவர்
நன்றித் தெரிவித்துக் கொண்டார்.








