MEDIA STATEMENT

கல்வியில் ஒற்றுமையை வளர்க்குமாறு அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அகோங் உத்தரவிட்டார்

29 அக்டோபர் 2023, 5:40 AM
கல்வியில் ஒற்றுமையை வளர்க்குமாறு அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அகோங் உத்தரவிட்டார்

கோலாலம்பூர், 29 அக்: நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் தேச முன்னேற்றத்தை மேம்படுத்துவதில் கல்வியின் முக்கியத்துவத்தை மறந்துவிட வேண்டாம் என்று   மாட்சிமை தங்கிய பேரரசர் அல்- சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல் முஸ்தபா பில்லா ஷா  அனைத்து பல்கலைக் கழகங்களையும் கேட்டுக் கொண்டார்.

மலேசியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பல்கலைக்கழகங்கள் முக்கியப் பங்காற்றுவதால், அது தொடர்ந்து சிறந்து விளங்குவதை உறுதி செய்வது கடமை  என்பதால் அல்-சுல்தான் அப்துல்லா இவ்வாறு கூறினார். மலாயா பல்கலைக்கழகத்தில் (UM) சீன ஆய்வுத் துறையின் 60 வது ஆண்டு விழாவைக் கொண்டாடும்  விழாவில் நேற்று இரவு ஸ்ரீ படுகா இவ்வாறு கூறினார்.

யூனிவர்சிட்டி மலாயா  துங்கு வேந்தர்  மண்டபத்தில் நடைபெற்ற விழாவிற்கு ராணியார் அகோங் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கந்தரியாவும்  வந்திருந்தார்.

அதன் 60 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் அல்-சுல்தான் அப்துல்லா, பல்கலைக்கழகம் மற்றும் ஆசிரியர்களின் வெற்றி மற்றும் வளர்ச்சிக்கு சீன ஆய்வுத் துறையின் பங்களிப்புக்காக தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

“கடந்த ஆறு தசாப்தங்களாக  சிறந்த இளைஞர்களை பல்கலைக்கழகங்களில் சேர்த்து, உதவித்தொகை வழங்கியுள்ளீர்கள், மாணவர்களை பயிற்சியாளர்களாக ஏற்றுக் கொண்டீர்கள், கல்வியாளர்களுக்கான ஆராய்ச்சி மானியங்களை வழங்கி உள்ளீர்கள் மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு நிதி அளித்துள்ளீர்கள்.

"நாடு மற்றும் எங்கள் நிறுவனங்கள் கனவு காணும் தரமான கல்வியை நிறைவு செய்வதில் உங்கள் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது" என்று மாட்சிமை மிக்க மாமன்னர் கூறினார்.

யூனிவர்சிட்டி மலாயா பற்றி அல்-சுல்தான் அப்துல்லா கூறுகையில், கல்வி மற்றும் ஆராய்ச்சியில் பல்கலைக்கழகம் தொடர்ந்து சிறந்து விளங்குகிறது.

"2023 தரவரிசையின் படி, தென்கிழக்கு ஆசியாவின் மூன்றாவது சிறந்த பல்கலைக்கழகம் மற்றும் ஆசியா முழுவதிலும் உள்ள எட்டு சிறந்த பல்கலைக் கழகங்கள் என்ற இடத்தை யுஎம் அடைந்தது பற்றி அறிந்தபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கான சான்றாகும். அனைத்து பல்கலைக்கழக ஊழியர்களின்," சேவையை பாராட்டினார் அவரது மாட்சிமை கூறினார்.

யாங் டி-பெர்துவான் அகோங், யூனிவர்சிட்டி மலாயாவின்  வேந்தராக இருக்கும் பேராக் சுல்தான் நஸ்ரின் முய்சுதின் ஷாவையும் பாராட்டினார்.

இதற்கிடையில், ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் டான்ஸ்ரீ சான் கோங் சோய் தனது உரையில், சீன ஆய்வுத் துறை, யுஎம் நிறுவப்பட்ட 60 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இந்த இரவு உணவு நடத்தப்பட்டது.

சீன மொழி கற்றலை வலுப்படுத்துதல், சீன கலாச்சாரத்தை ஆராய்தல் மற்றும் ஊக்குவித்தல் மற்றும் இனக் குழுக்களிடையே கலாச்சார பரிமாற்றத்தைப் எளிதாக்குதல் உள்ளிட்ட மூன்று முக்கிய நோக்கங்களுடன் இத்துறை நிறுவப்பட்டது என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.