கோலாலம்பூர், அக் 23: விவசாயத் துறையை மேம்படுத்த புதிய- நவீன தொழில்நுட்பங்களைத் தீவிரமாகச் சிலாங்கூர் ஆராய்ந்து வருகிறது, இதனால் மாநிலத்தில் உணவு விநியோகம் உறுதி செய்யப்படும்.
மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிக வருமானத்தைப் பெறுவதற்காகப் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொழில்துறையை முன்னேற்றுவதில் அரசு உறுதியாக உள்ளது என்று வர்த்தக முதலீட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.
"காலநிலை மாற்றம், ஆள் பற்றாக்குறை மற்றும் வரையறுக்கப்பட்ட நிலம் ஆகியவற்றின் நெருக்கடியுடன் நாம் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்" என்று இங் சீ ஹான் கூறினார்.
முன்னதாகப், பயோடெக்னாலஜி துறையை முன்னேற்றுவதற்காக இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் (இன்வெஸ்ட் சிலாங்கூர்) மற்றும் யுனிவர்சிட்டி புத்ரா மலேசியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) பரிமாற்றத்தை அவர் நேரில் கண்டார்.
இதற்கிடையில், சிப்ஸ்யின் ஏழாவது பதிப்பில் 1,000க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களிடமிருந்து 33 சதவீத வெளிநாட்டு உணவு மற்றும் பானங்கள் (F&B) சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களின் பங்கேற்பு தொடர்புடைய துறையை முன்னேற்றுவதற்கான நல்ல தொடக்கமாக அவர் விவரித்தார்.
"சீனா, தைவான், உகாண்டா மற்றும் இந்தோனேசியா போன்ற வெளிநாடுகளின் ஒத்துழைப்போடு, உணவு விநியோகத்திற்கு நாங்கள் ஒன்று அல்லது இரண்டு நாடுகளைச் சார்ந்து இருப்பது மட்டுமல்லாமல், அதற்குப் பதிலாக ஆதாரங்களைப் பன்முகப் படுத்தவும் முடியும்.
"மலேசியாவில் உள்ள விவசாய தொழில் முனைவோர்களும் நவீன விவசாயத்தில் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்," என்று அவர் மேலும் கூறினார்.








