NATIONAL

பரம ஏழை குடும்பத் தலைவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

19 அக்டோபர் 2023, 8:59 AM
பரம ஏழை குடும்பத் தலைவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

ஷா ஆலம், அக் 19: இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் பதிவு செய்யப்பட்ட பரம ஏழை குடும்பத் தலைவர்களின் எண்ணிக்கை 19,000யிலிருந்து 110,663ஆக குறைந்துள்ளது என்று துணைப் பொருளாதார அமைச்சர் கூறினார்.

``e-Kasih`` இன் தரவு அடிப்படையில் பல்வேறு ஏஜென்சிகள் மற்றும் அரசுத் துறைகளின் தீவிர வறுமையை ஒழிப்பதற்கான திட்டங்களின் செயல் திறனால் இந்த குறைவு ஓரளவுக்கு உந்தப்பட்டது என்று டத்தோ ஹனிவா ஹஜார் தாயிப் விளக்கினார்.

"வறுமையை ஒழிப்பதற்கான திட்டங்கள் தாழ்வார ஆணையம், மாநில பொருளாதார மேம்பாட்டுக் கழகம், பொருளாதார திட்டமிடல் பிரிவு (EPU) மற்றும் மாவட்ட அலுவலகங்கள் உட்பட பல்வேறு தரப்பினராலும் மேற்கொள்ளப் படுகின்றன.

" பொருளாதார திட்டமிடல் பிரிவு ஆதரவின் மூலம் தீவிர வறுமை திட்டத்தை செயல்படுத்த பங்கேற்பாளர்களுடன் ஆலோசனைகளைப் பெற மாவட்ட அலுவலகம்  உதவியது," என்று அவர் கூறினார்.

இன்று டேவான் ராக்யாட்டில் மெர்போக் பிரதிநிதி நஸ்ரி அபு ஹாசனின் கேள்விக்கு பதிலளித்த ஹனிஃபா ஹஜர், இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் தொழிலாளர் சந்தை நிலைமையும் மேம்பட்டதாக கூறினார்.

கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இருந்த 3.9 சதவீதத்துடன் ஒப்பிடும் போது, குறிப்பிட்ட காலத்திற்கான வேலையின்மை விகிதம் 3.4 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றும், இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றும் அவர் விளக்கினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.