கோலாலம்பூர், அக் 19- 'டத்தோ' அந்தஸ்து கொண்ட உள்ள உள்ளூர் விமான நிறுவனத்தின் இணை நிறுவனர், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் நேற்று முதல் நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பணமோசடி தடுப்பு, பயங்கரவாத நிதியுதவி எதிர்ப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கை வருவாய் சட்டம் 2001 இன் கீழ் விசாரணைக்காக அம்மூவரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகப் புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமது யூசுப் கூறினார்.
விமான நிறுவனம் ஒன்றின் பங்குதாரரான 57 வயது நபர், அவரது 55 வயது மனைவி மற்றும் அவர்களது 26 வயது மகன் ஆகியோர் ஷா ஆலமில் உள்ள அவர்களது வீட்டில் மாலை நேற்று முன்தினம் மாலை5.30 மணிக்குக் கைது செய்யப்பட்டதாகப் பெர்னாமா தெரிவித்துள்ளது.








