NATIONAL

பொதுக் கழிப்பறைகள் அடுத்த ஆண்டு 150 மில்லியன் ரிங்கிட் செலவில் புதுப்பிக்கப்படும்

13 அக்டோபர் 2023, 1:35 PM
பொதுக் கழிப்பறைகள் அடுத்த ஆண்டு 150 மில்லியன் ரிங்கிட் செலவில்  புதுப்பிக்கப்படும்

ஷா ஆலம், அக் 13: நாடு முழுவதும் உள்ள 150 உள்ளூர் அதிகாரிகளால் (பிபிடி)

இயக்கப்படும் பொதுக் கழிப்பறைகள் அடுத்த ஆண்டு 150 மில்லியன் ரிங்கிட் செலவில்

புதுப்பிக்கப்படும்.

அதை பராமரித்தல் மற்றும் பழுதுபார்க்கும் செயல்முறையையும் இந்த தொகை

உள்ளடக்கியதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

"8,354 பள்ளிகளில் கழிப்பறை பழுதுபார்க்கும் திட்டம் இந்த ஆண்டு முழுவதுமாக

நிறைவடைந்துள்ளது. அடுத்த ஆண்டு, நாடு முழுவதும் உள்ள பொதுக் கழிப்பறைகளைச்

சரிசெய்யும் அதே உறுதிப்பாடு தீவிரப்படுத்தப்படும்," என்று அவர் 2024 பட்ஜெட்டை

தாக்கல் செய்யும் போது கூறினார்.

இந்த ஆண்டு, 8,354 பள்ளிகளுக்கு RM630.77 மில்லியன் ஒதுக்கீட்டில் கழிப்பறை

பராமரிப்பு பணிகளில் அரசாங்கம் கவனம் செலுத்தியது. இது ஜூலை பாதியில்

தொடங்கியது.

“8,354 பள்ளிகளில் கழிப்பறை சீரமைப்புத் திட்டம் கிட்டத்தட்ட முழுமையாக

இவ்வாண்டு நிறைவடையும்,” என்றார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.