NATIONAL

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின்  மேம்பாட்டுக்கு  8 பில்லியன் ரிங்கிட் கடன் நிதி

13 அக்டோபர் 2023, 10:47 AM
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின்  மேம்பாட்டுக்கு  8 பில்லியன் ரிங்கிட் கடன் நிதி

 கோலாலம்பூர், அக் 13: சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (எஸ்எம்இ) ஆதரவளிக்க பேங்க் நெகாரா மலேசியாவின் (பிஎன்எம்) கீழ் மொத்தம் 8 பில்லியன் ரிங்கிட் கடன் நிதி அளிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மேலும், 600 மில்லியன் ரிங்கிட் குறிப்பாகக் குறுந்தொழில் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட தொழில்முனைவோர், சிறு ஒப்பந்ததாரர்கள், நிலைத்தன்மை நடைமுறைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான துறைகளுக்கு உதவுவதற்காக இந்த தொகையை அவர் குறிப்பிட்டார்.

"2024 ஆம் ஆண்டில், தேசிய கருவூல தாக்க நிதியின் கீழ் RM600 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும், கிராமப்புற, பாதி நகர்ப்புற சமூகங்கள் மற்றும் நிதிச் சேவைகள் குறைவாக உள்ளவர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கவும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது," என்று மலேசிய மடாணி பட்ஜெட்டை தாக்கல் செய்த போது அவர் கூறினார்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.