ஷா ஆலம், அக் 12: இன்று பிற்பகல் 6 மணி வரை சிலாங்கூரில் இடியுடன் கூடிய
கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதே வானிலை தான் கோலாலம்பூர், புத்ராஜெயா, பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக்,
கிளந்தான், திரங்கானு, பகாங், நெகிரி செம்பிலான், ஜொகூர், சபா மற்றும் சரவாக் ஆகிய
மாநிலங்களிலும் நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத்
துறை (மெட்மலேசியா) முகநூலில் தெரிவித்துள்ளது.
மெட் மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின்
தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி
நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாக பெய்யும் போது எச்சரிக்கைகள்
வழங்கப்படுகின்றன.
இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால
எச்சரிக்கை ஆகும்.
சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப்
பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப்
பார்க்கவும் அல்லது myCuaca பயன் பாட்டை பதிவிறக்கம் செய்யவும்.








