ஷா ஆலம், அக் 12: இன்று பிற்பகல் 5 மணி வரை உலு சிலாங்கூர் மாவட்டத்தில்
இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசும் என்று மலேசிய
வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.
பெர்லிஸ், பினாங்கு, நெகிரி செம்பிலான், கெடா, பேராக், பகாங், கிளந்தான், திரங்கானு,
சரவாக் மற்றும் சபா ஆகிய மாவட்டங்களில் இதே வானிலை தான் நிலவும் என
கணிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மெட் மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின்
தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி
நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாக பெய்யும் போது எச்சரிக்கைகள்
வழங்கப்படுகின்றன.
இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால
எச்சரிக்கை ஆகும்.
சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப்
பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப்
பார்க்கவும் அல்லது myCuaca பயன் பாட்டை பதிவிறக்கம் செய்யவும்.








