கோம்பாக், செப்.22: இங்குள்ள ஜாலான் பி23, ஜாலான் சுங்கை துவா மற்றும் கம்பொங் பெண்டஹாரா சுங்கை துவா சந்திப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் திட்டம், போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயண நேரத்தை மிச்சப்படுத்துவதில் வெற்றி பெற்றது. இங்குள்ள குடியிருப்பாளர்களை திடீர் வெள்ளம் அடிக்கடி அலைக்கழிக்கிறது.
டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, RM25.5 மில்லியன் செலவில், கம்பொங் சுங்கை கெர்தாஸ் சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெருக்கு பிரச்சனையை சமாளிக்கவும், ஒரு வழிப் பாதையாக இருந்தை இந்த திட்டம் நிறைவடைந்ததையடுத்து, தற்போது சாலை இரண்டு ஒரு வழிப் பாதையாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
“இது பயண நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், நெரிசலையும் குறைக்கும். அதே வேளையில் வெள்ளப் பிரச்னையைச் சமாளிக்கும் பணிக்கான கூறும் உள்ளது," என்று இன்று இங்கு இத் திட்டத்தினை தொடக்கி வைக்கும் விழாவில் அவர் கூறினார்.
உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதில், மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதிலும் மாநில அரசின் அக்கறையை இத்திட்டத்தின் வளர்ச்சி பிரதிபலிக்கிறது என்று அமிருதீன் மேலும் கூறினார்.
இந்த திட்டம் 2018 இல் உருவாக்கப்பட்டது மற்றும் கோவிட்-19 தொற்றுநோயின் சவால் உட்பட பல காரணிகளால் முடிக்க ஐந்து ஆண்டுகள் ஆனதாக குறிப்பிடப்பட்டுள்ளது.








