EKSKLUSIF

நான்கு கார்கள் தீக்கிரை- முதியவர் கருகி மரணம்

16 செப்டெம்பர் 2023, 9:48 AM
நான்கு கார்கள் தீக்கிரை- முதியவர் கருகி மரணம்

ஷா ஆலம், செப் 16-  டேசா மெந்தாரி அடுக்குமாடி குடியிருப்பு வளாக வாகன நிறுத்துமிடத்தில் இன்று நான்கு வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.

இச்சம்பவத்தில் 67 வயது முதியவர் உயிரிழந்தார். சம்பந்தப்பட்ட ஆடவரின்  உடல் வாகனம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் இன்று அதிகாலை 2.45 மணிக்கு  தகவல் வந்ததாக  சிலாங்கூர் மாநில  தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின்  நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் முக்தார் கூறினார்.

 ஜாலான் பெஞ்சாலா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் ஆறு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு  உடனடியாக விரைந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த தீ விபத்தில் ஃபோர்டு டெnல்ஸ்டார் வகை வாகனம் முற்றிலும் எரிந்தது   நாசா சிட்ரா 50 விழுக்காடு  புரோட்டான் வீரா மற்றும் டைஹாட்சு ரக வாகனங்கள்  ஐந்து விழுக்காடும் சேதமடைந்தன.

நாசா சிட்ரா காரில்  67 வயதுடைய நபர் ஒருவர் உடல் கருகிய நிலையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் இருப்பதாகவும் இச்சம்பவத்தில் இறந்தவரின் உடல் சுங்கை பூலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.