ANTARABANGSA

மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்

11 செப்டெம்பர் 2023, 7:25 AM
மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்

அமிஸ்மிஸ், செப் 11: மொராக்கோவை வெள்ளிக்கிழமை தாக்கிய வலுவான

நிலநடுக்கத்தில் குறைந்தது 2,122 பேர் உயிரிழந்தனர் மற்றும் 2,421 பேர்

காயமடைந்தனர் என்று மொராக்கோ உள்துறை அமைச்சகத்தின் ஞாயிற்றுக்கிழமை

புதுப்பிப்பு தெரிவிக்கிறது.

அல் ஹவுஸ் மாகாணத்தில் மொத்தம் 1,351 பேரும், தாருடான்ட் மாகாணத்தில் 492

பேரும், சிச்சௌவாவில் 201 பேரும், மராகேஷில் 17 பேரும் உயிரிழ்ந்ததாக

அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

அன்றைய நாள் மரகேஷில் வசிக்கும் மக்கள் நில அதிர்வுகளை உணர முடிகிறது என்று

சின்ஹுவா செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் மரகேஷ் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 300,000க்கும்

அதிகமான மக்களை பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு

தெரிவித்துள்ளது.

மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொராக்கோவை வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 11:11 மணியளவில் (2211

GMT) 18.5 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது என அமெரிக்க புவியியல் ஆய்வு

தெரிவித்தது.

-பெர்னாமா-சின்ஹுவா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.