NATIONAL

பொதுச் சேவைத் துறை தலைமை இயக்குநர் மீதான விசாரணை தொடர்பில் அறிக்கையா? எம்.ஏ.சி.சி. மறுப்பு

25 ஆகஸ்ட் 2023, 3:14 AM
பொதுச் சேவைத் துறை தலைமை இயக்குநர் மீதான விசாரணை தொடர்பில் அறிக்கையா? எம்.ஏ.சி.சி. மறுப்பு

கோலாலம்பூர், ஆக 25 - பொதுச் சேவைத்

துறை தலைமை இயக்குநர் சம்பந்தப்பட்ட

ஊழல் விசாரணை தொடர்பாக ஆகஸ்டு

23ஆம் தேதியிட்ட பத்திரிகை அறிக்கையை

வெளியிட்டதாகக் கூறப்படுவதை மலேசிய

ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.)

மறுத்துள்ளது.

இதுபோன்ற போலி அறிக்கையை

வெளியிடுவது என்பது குரோத நோக்கம்

கொண்ட மற்றும் பொதுமக்களிடம் தவறன

கருத்தைப் பரப்பும் நோக்கிலானச் செயலாகும்

என்று எம்.ஏ.சி.சி. நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

எனவே, எந்தவொரு உறுதியற்ற அல்லது

தவறான தகவலையும் பரப்பவோ அல்லது

பகிரவோ வேண்டாம் என்று பொதுமக்கள்

அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று ஆணையம்

கூறியது.

பொதுச் சேவைத் துறைத் தலைமை

இயக்குநர் டத்தோ டாக்டர் சுல்காப்லி முகமது

சம்பந்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை

எம்.ஏ.சி.சி.விசாரிக்கிறது எனும்

தலைப்பிலான ஊடக அறிக்கையை

குறிப்பிட்டு இந்த அறிக்கையை அந்த

ஆணையம் வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.