ஷா ஆலம், ஆகஸ்ட் 24: சிலாங்கூர் முழுவதும் சுகாதார அமைச்சகத்தின் (KKM) கீழ் உள்ள மொத்தம் 33 பழமையான கிளினிக்குகள் RM10.5 மில்லியன் செலவில் கட்டம் கட்டமாக மேம்படுத்தப்பட பட்டியலிடப்பட்டுள்ளது.
எக்ஸ் (X) பக்கத்தின் மூலம் அந்த எண்ணிக்கையில் ஒரு கிளினிக் புதுப்பிக்கப்பட்டு, இன்னும் 26 கிளினிக்குகள் மேம்பாட்டு பணியில் இருந்து வருவதாக அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்தார்.
நாடு முழுவதும் இந்த ஆண்டு RM111 மில்லியன் ஒதுக்கீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளது 436 கிளினிக்குகளில் இது ஒரு பகுதியாகும்.
முன்னதாக, சுகாதார அமைச்சகம் மோசமான கிளினிக்குகளை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தியது. அவை 15 வருடங்களுக்கு மேற்பட்ட பழமையான கிளினிக்குகள், பயன்பாடு சிக்கல்கள் உள்ள கிளினிக்குகள் மற்றும் பேரழிவுகளால் சேதமடைந்த கிளினிக்குகள் ஆகும்.
சிலாங்கூர் முழுவதும் உள்ள பழுது பார்க்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளினிக்குகளின் பட்டியல் இங்கே:








