தேசியக் கொடியை பறக்க விடுங்கள், வெ.50 பரிசை வெல்லுங்கள்- செலாயாங் நகராண்மைக் கழகம் அழைப்பு

18 ஆகஸ்ட் 2023, 4:49 AM
தேசியக் கொடியை பறக்க விடுங்கள், வெ.50 பரிசை வெல்லுங்கள்- செலாயாங் நகராண்மைக் கழகம் அழைப்பு

ஷா ஆலம், ஆக 18- தேசியக் கொடியை பறக்க விடுவதன் வழி செலாயாங் நகராண்மைக் கழகத்தின் 30 குடியிருப்பாளர்கள் தலா 50.00 வெள்ளி ரொக்கத்தை  வெல்லும் வாய்ப்பை பெறுவர்.

தேசிய மாதக் கொண்டாட்டத்திற்கு மெருகூட்டுவதற்காக ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை அனைத்து குடியிருப்பாளர்களும் தேசிய் கொடியை பறக்க விடுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக நகராண்மைக் கழகம் கூறியது.

தேசிய மாத கொண்டாட்டத்தையொட்டி நாட்டுப்பற்று இயக்கம் மற்றும் 2023 ஆம் ஆண்டு செலாயாங் நகராண்மைக் கழகத்தின் தேசியக் கொடியை பறக்கவிடும் இயக்கத்தில் பங்கேற்க வாருங்கள் என அது கேட்டுக் கொண்டது .

செலாயாங் நகராண்மைக் கழக பகுதியில்  தேசியக் கொடிகளை பறக்கவிடும் 30 குடியிருப்புகள் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்டு 50 வெள்ளி ரொக்கமாக வழங்கப்படும்.

இந்த போட்டி  தொடர்பான கேள்விகள் அல்லது கூடுதல் தகவலுக்கு, 03-6126 5824 என்ற எண்களில் நகராண்மைக் கழகத்தின் வர்த்தக மற்றும் தொடர்புத் துறையைத் தொடர்பு கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.