NATIONAL

தொழில் கல்வியை முடித்த மாணவர்கள் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர்- அமைச்சர் சிவகுமார் தகவல்

15 ஆகஸ்ட் 2023, 8:51 AM
தொழில் கல்வியை முடித்த மாணவர்கள் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர்- அமைச்சர் சிவகுமார் தகவல்

செர்டாங் ஆக 15- மனிதவள அமைச்சினால் வழங்கப்படும்

திவேட் தொழில் திறன் கல்வியை முடித்த மாணவர்களில் 88.6 விழுக்காட்டினருக்கு

வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

மனிதவள தொழில் கல்வியை முடிக்கும் பட்டதாரி மாணவர்களில் 34.7

விழுக்காட்டினர் முன் கூட்டியே வெற்றிகரமாக ஒரு வேலை வாய்ப்பைப்

பெற்றுள்ளனர்.

மேலும் ILJTM எனப்படும் தொழில் திறன் துறையில் தங்கள் படிப்பை முடித்து,

மொத்தம் 70.8% மாணவர்கள் அதே துறையில் வேலை வாய்ப்பைப் பெற

முடிந்ததுள்ளது என்று அவர் சொன்னார்.

ஆகவே திவேட் தொழில் கல்வி மாணவர்களுக்குச் சிறந்த எதிர்காலத்தை

அமைத்து கொடுத்துள்ளது.

படித்த கல்விக்கு ஏற்ற வகையில் வேலை கிடைப்பதால் தீவேட் இரண்டாம் தர

கல்வியாக கருதாமல் மாணவர்கள் உற்சாகத்துடன் இந்த கல்வியைப் பயில முன் வரும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக இந்திய மாணவர்களும் தீவேட் தொழில் திறன் கல்வியைப் பயில அதிக

வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்று அவர் சொன்னார்.

செர்டாங் Meaps மாநாட்டு மண்டபத்தில் நேற்றும் இன்றும் நடைபெற்ற பட்டமளிப்பு

விழாவில் 32 தொழில் திறன் கல்வி மையங்களில் தேர்ச்சி பெற்ற ஆயிரத்திற்கும்

மேற்பட்ட மாணவர்கள் டிப்ளோமா பட்டம் பெற்றனர்

இந்த பட்டமளிப்பு விழாவுக்கு தலைமை ஏற்ற பின்னர் நிருபர்களிடம் பேசுகையில் மனிதவள அமைச்சர் சிவகுமார் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.