NATIONAL

நாடு முழுவதும் போக்குவரத்து சீராக உள்ளது

12 ஆகஸ்ட் 2023, 9:50 AM
நாடு முழுவதும் போக்குவரத்து சீராக உள்ளது

கோலாலம்பூர், ஆகஸ்ட் 12: இன்று மதியம் 1 மணி நிலவரப்படி நாடு முழுவதும் போக்குவரத்து சீராக உள்ளது மற்றும் ஆறு மாநிலங்களில் நடைபெற்று வரும் மாநிலத் தேர்தல்களில் (பிஆர்என்) அசாதாரண நெரிசல் எதுவும் ஏற்படவில்லை.

ஜாலான் டுத்தா டோல் பிளாசா (வடக்கு), சுங்கை பீசி டோல் பிளாசா (தெற்கு) மற்றும் கோம்பாக் டோல் பிளாசா (கிழக்கு கடற்கரை) ஆகியவற்றில் போக்குவரத்து சீராக இயங்கி வருவதாகவும், இதுவரை எந்த விபத்தும் ஏற்படவில்லை என்றும் மலேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (LLM) செய்தித் தொடர்பாளர் கூறினார். .

"வடக்கே செல்லும் சில முக்கிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அவை சுங்கை பட்டாணி, கெடா பிராய், மற்றும் பினாங்கு நோக்கி செல்லும் பாதைகள் ஆகும்

"மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை வழக்கம் போல் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தால் போக்குவரத்து நேரிசல் ஏற்படும். இதுவரை போக்குவரத்து நிலைமை சீராக உள்ளது, ஆனால் விபத்து ஏதும் ஏற்பட்டால் நிலைமை மாறலாம்," என்று அவர் இன்று பெர்னாமாவிடம் கூறினார்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.