ஷா ஆலம், ஆகஸ்ட் 11: மாநிலத் தேர்தலை (பிஆர்என்) முன்னிட்டு டத்தோ மந்திரி புசாரின் சிறப்பு உரையை இன்று காலை 11 மணிக்கு நேரடியாக வழங்க உள்ளார்.
பொதுமக்கள், குறிப்பாகச் சிலாங்கூர் குடிமக்கள், டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் அனைத்து சமூக ஊடக தளங்கள் மூலம் அதனை பின் தொடரலாம்.
கூடுதலாக, அதை சிலாங்கூர் டிவி, சினார் ஹரியான், டிவி3 மற்றும் ஆஸ்ட்ரோ அவானி ஆகியவற்றிலும் நேரலையில் காணலாம்.
சிலாங்கூரைத் தவிர, இந்த சனிக்கிழமை அன்று தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட வாக்களிப்பில் கிளந்தான், திரங்கானு, நெகிரி செம்பிலான், கெடா மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களும் அடங்கும்.








