கோலாலம்பூர், ஆகஸ்ட் 8: இன்று ஆறு மாநிலங்களில் நடைபெறும் மாநிலத் தேர்தலுக்கான (பிஆர்என்) முன்கூட்டியே வாக்களிப்பு மற்றும் கோலா திரங்கானு நாடாளுமன்றத்திற்கான இடைத்தேர்தல் (பிஆர்கே) வாக்களிப்பு காலை மணி 9 நிலவரப்படி 15 சதவீதத்தை எட்டியுள்ளது.
கிளந்தான் அதிகபட்சமாக 23 சதவீதம், கெடா மற்றும் பினாங்கில் தலா 22 சதவீதம், திரங்கானுவில் 20 சதவீதம் என பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நெகிரி செம்பிலான் 19 சதவீதத்தைப் பதிவு செய்தது; சிலாங்கூர் 17 சதவீதம், கோலா திரங்கானு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் ஆரம்ப வாக்குகள் 16 சதவீதமாக பதிவானது.
ஆறு மாநிலங்களில் மாநிலத் தேர்தலை முன்னிட்டு மொத்தம் 260 ஆரம்ப வாக்குப்பதிவு மையங்கள் இன்று காலை 8 மணி முதல் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டன.
ஒரே நேரத்தில் நடைபெற்ற கோலா திரங்கானு நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்காக திரங்கானு காவல் படைத் தலைமையகத்தில் (IPK) மூன்று ஆரம்ப வாக்குப்பதிவு மையங்களும் திறக்கப்பட்டுள்ளது.
– பெர்னாமா








