ஷா ஆலம், ஜூலை 31: இன்று அதிகாலை தெலோக் பங்லிமா காரங், கம்போங் மேடானில் உள்ள 20 ஆண் மாணவர்கள் தங்கியிருந்த தஹ்ஃபிஸ் பள்ளி விடுதி தீயில் எரிந்து நாசமானது.
விடுதிக் கட்டிடத்தின் 70 சதவீதப் பகுதி எரிந்து நாசமானதில் 13 முதல் 17 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களும் தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர்.
தீ விபத்து குறித்து செயல்பாட்டு மையத்திற்கு (பிஜிஓ) நேற்று நள்ளிரவு 12.03 மணி அளவில் தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) தலைவர் வான் முகமட் ரசாலி வான் இஸ்மாயில் கூறினார்.
சம்பவம் நடந்த இடத்திற்கு அதிகாரிகள் உட்பட மொத்தம் 18 உறுப்பினர்கள் அனுப்பப்பட்டதாகவும், நள்ளிரவு 12.54 மணியளவில் தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
"20x70 சதுர அடி பரப்பளவில் ஆண்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது.
"இந்த சம்பவத்தின் போது, 20 மாணவர்கள் காயமின்றி தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர்," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
- பெர்னாமா








