NATIONAL

குறைந்த இழப்பீடு தொடர்பான போலிச் செய்திகளை நம்ப வேண்டாம்

29 ஜூலை 2023, 12:24 PM
குறைந்த இழப்பீடு தொடர்பான போலிச் செய்திகளை நம்ப வேண்டாம்

ஷா ஆலம், ஜூலை 29: கிழக்கு கடற்கரை இரயில் இணைப்பு (ECRL) திட்டத்தைக் குறித்து குறைந்த இழப்பீடு தொடர்பான போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் என்று தாமான் சுங்கை சிரே, கிள்ளானில் வசிப்பவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த நிலம் கையகப்படுத்துதலின் நிலை குறித்த தகவல்கள் அவ்வப்போது வழங்கப்படும் என டெவலப்பர் ``Malaysia Rail Link Sdn Bhd`` (MRL) தெரிவித்தது.

"குறைந்த இழப்பீடு சலுகைகள் பற்றி சமூக ஊடகங்களில் பரவும் ஊகங்கள் மற்றும் போலி செய்திகளால் ஏமாற வேண்டாம் என்று உரிமையாளர் மற்றும் அங்கு வசிப்பவர்களை MRL கேட்டு கொண்டது" என்று இன்று அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

ஜூலை 24 அன்று, எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, குடியிருப்பாளர்களுக்கு இடிப்பு நோட்டீஸ் எதுவும் வழங்கப்படவில்லை என்று வலியுறுத்தினார்.

கட்டுமானப் பணிகள் 2025 இல் மட்டுமே தொடங்கும் என்றும் டெவலப்பருடனான விவாதங்கள் இன்னும் நடந்து வருவதாகவும் கூறினார். மேலும், இன்னும் எதுவும் இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

சமீபத்தில், எதிர்க்கட்சி ஆர்வலர்கள் அமீருடினுக்கு இப்பகுதியில் ECRL கட்டுவது தொடர்பாக தாமான் சுங்கை சிரேவில் வசிப்பவர்களை சந்திக்க சவால் விடுவதைக் காட்டும் வீடியோ வைரலானது.

ஏப்ரல் 2021 இல், மத்திய அரசாங்கம் வடக்கு கோட்டின் C பிரிவில் தெமர்லோ, பெந்தோங், கோம்பாக், உலு சிலாங்கூர் மற்றும் கிள்ளான் நிலையங்களை உள்ளடக்கிய கட்டுமானத்தை அறிவித்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.