NATIONAL

சிலாங்கூரின் கனிம வளங்களை நிர்வகிக்கும் கேஎஸ்எஸ்பி பல மாநிலங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது

21 ஜூலை 2023, 9:24 AM
சிலாங்கூரின் கனிம வளங்களை நிர்வகிக்கும் கேஎஸ்எஸ்பி பல மாநிலங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது

ஷா ஆலம், ஜூலை 21: சிலாங்கூரின் கனிம வளங்களை நிர்வகிப்பதற்கு நிறுவப்பட்ட கும்புலன் செமஸ்தா எஸ்டிஎன் பிஎச்டி (கேஎஸ்எஸ்பி) பல மாநிலங்களுக்கு உத்வேகம் அளித்ததாக டத்தோ மந்திரி புசார் கூறினார்.

நிதி கசிவைத் தவிர்ப்பதற்காக மாநிலத்தின் விளைபொருட்களை கட்டுப்படுத்தப், பகாங் தற்போது கேஎஸ்எஸ்பி முறையை முன்மாதிரியாக எடுத்திருப்பதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விளக்கினார்.

"சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த முறை மாநில வருவாய் திருட்டை வெற்றிகரமாக கட்டுப்படுத்துகிறது மற்றும் நிதி கசிவைத் தடுக்கிறது," என்று அவர் கேஎஸ்எஸ்பி ஊழியர்களிடத்தில் உரையாற்றும் போது கூறினார்.

இதற்கிடையில், அவதூறு பிரச்சனை உட்பட பல்வேறு சவால்களை எதிர்கொள்வதுடன், மாநிலத்தின் வருவாய் நிர்வாகத்தை கையகப்படுத்தும் செயல்முறை எளிதானது அல்ல என்று அமிருடின் விவரித்தார்.

"இருப்பினும், சில ஆண்டுகளுக்குப் பிறகு அது நல்ல பலனைத் தந்தது. இது சமூகத்திற்கு பல புதிய வேலை வாய்ப்புகளையும் திறக்கிறது," என்று அவர் கூறினார்.

கேஎஸ்எஸ்பி, மணல், பாறை பொருட்கள் மற்றும் கனிம வளங்கள் சம்பந்தப்பட்ட ஆய்வு, உற்பத்தி மற்றும் விற்பனையை நிர்வகிக்க 26 ஜூன் 2008 இல் நிறுவப்பட்டது

இந்நிறுவனம் பல்வேறு புதிய தொழில்களில் ஈடுபடுவதன் மூலம் தனது வணிகத்தை விரிவுபடுத்துகிறது மற்றும் ஆலோசனை, டிஜிட்டல் கண்டுபிடிப்பு, உள்கட்டமைப்பு மற்றும் வர்த்தகம் போன்ற பிற சேவைகளை வழங்குகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.