NATIONAL

தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு வாக்களிக்கச் செல்ல கட்டாயம் அனுமதிக்க வேண்டும்

12 ஜூலை 2023, 6:03 AM
தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு வாக்களிக்கச் செல்ல கட்டாயம் அனுமதிக்க வேண்டும்

மாராங், ஜூலை 12 - அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆறு மாநிலத் தேர்தலில் வாக்களிக்கத் தங்கள் தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முதலாளிகள் அனுமதிக்க வேண்டும் என்று மனிதவளத் துறை துணை அமைச்சர் முஸ்தபா சக்முத் கூறினார்.

எவ்வாறாயினும், இந்த விவகாரம் குறித்து தேர்தல் குற்றச் சட்டம் 1954 இல் உள்ள விதிகளை மேற்கோள் காட்டி சுற்றறிக்கை வெளியிட அமைச்சகம் திட்டமிடவில்லை.

"தற்போதுள்ள சட்டத்தின் கீழ் தங்கள் ஊழியர்களை வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த அனுமதிக்க மறுக்கும் முதலாளிகளுக்கு RM5,000 வரை அபராதம் அல்லது ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

"அனைத்து முதலாளிகளும் சட்டத்திற்கு இணங்க வேண்டும் மற்றும் தங்கள் ஊழியர்களை வாக்களிக்க அவர்களின் சொந்த ஊருக்குத் திரும்ப அனுமதிக்க வேண்டும்.

ஊழியர்கள் வாக்களிக்க சொந்த ஊருக்குத் திரும்ப அனுமதிக்கப் படாவிட்டால், தொழிலாளர் துறை அல்லது தொடர்புடைய பிற நிறுவனங்களிடம் தகுந்த நடவடிக்கைக்கு எடுக்க புகார் செய்யவும்,” என்றார்.

6 மாநில தேர்தல்களும் ஆகஸ்ட் 12-ம் தேதியும், வேட்புமனு தாக்கல் ஜூலை 29-ம் தேதியும், வாக்குப்பதிவு ஆகஸ்ட் 8-ம் தேதியும் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.