NATIONAL

பொதுச் சேவை சம்பளத் திட்டத்தை மறு ஆய்வு செய்வது குறித்து அமைச்சரவை விவாதிக்கும்

7 ஜூலை 2023, 9:55 AM
பொதுச் சேவை சம்பளத் திட்டத்தை மறு ஆய்வு செய்வது குறித்து அமைச்சரவை விவாதிக்கும்

சிரம்பான், ஜூலை 7 - பொதுச் சேவை சம்பள திட்டத்தை மறு ஆய்வு செய்வது குறித்து அமைச்சரவையில் அடுத்த வாரம் விவாதிக்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

நீண்ட நாட்களாக இத்திட்டம் சீரமைக்கப்படாததால் மறு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என்றார். கடந்த 2013ம் ஆண்டு இதுபோன்ற ஆய்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“நாங்கள் மறுபரிசீலனை முன்மொழிவை அமைச்சரவையின் ஒப்புதலுக்காக முன்வைப்போம். பொது சேவை இயக்குநர் ஜெனரல் டத்தோ சுல்காப்லி முகமது மற்றும் அரசாங்கத்தின் தலைமை செயலாளர் டான்ஸ்ரீ முகமட் ஜூகி அலி ஆகியோர் ஆய்வுக் குழுவை அமைப்பதற்குத் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். நான் ஒப்புக்கொண்டேன்.

“அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் சம்பளம் இன்னும் மிகக் குறைவாகவே உள்ளது, இந்த விஷயத்தை அரசாங்கம் கருத்தில் கொள்வது நியாயமானது. நாங்கள் நிதிக் கட்டுப்பாடுகளால் பிணைக்கப் பட்டிருந்தாலும், சில மாற்றங்களைச் செய்வதற்கான வழியைக் கண்டுபிடிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

இன்று நெகிரி செம்பிலான் அரசு ஊழியர்களுக்கு தனது உரையை வழங்கிய பின்னர் பிரதமர் இதனை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சுகி மற்றும் பராமரிப்பாளர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நாடு முழுவதும் உள்ள மலேசிய ஆயுதப்படை (MAF) குடியிருப்புகளை பழுதுபார்க்கும் பராமரிக்கவும் அரசாங்கம் கூடுதலாக RM200 மில்லியனை ஒதுக்கியுள்ளதாக பிரதமர் கூறினார்.

"இராணுவ வீட்டு வசதிகளின் பரிதாபகரமான மற்றும் புறக்கணிக்கப்பட்ட நிலையை நாங்கள் கண்டோம், எனவே பழுது பார்ப்பதற்கு உடனடி நிதியுதவிக்கு நான் ஒப்புதல் அளித்துள்ளேன். மேலும் நாளை நான் காவல்துறை வீட்டு வசதிக்கான கூடுதல் ஒதுக்கீடுகளை அறிவிப்பேன்," என்று அவர் கூறினார்.

பிப்ரவரியில் பட்ஜெட் 2023 ஐ தாக்கல் செய்வதில், மலேசிய ஆயுதப்படை குடியிருப்புகளை பராமரிப்பதற்கும், ராயல் மலேசியன் காவல்துறை உட்பட உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஊழியர் குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களை பழுது பார்ப்பதற்கு RM500 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்வதாக அரசாங்கம் அறிவித்தது.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.