ANTARABANGSA

ஒன்பது வயது சிறுவன் தனது மூத்த சகோதரனால் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்துள்ளான்

6 ஜூலை 2023, 3:28 AM
ஒன்பது வயது சிறுவன் தனது மூத்த சகோதரனால் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்துள்ளான்

மலாக்கா, ஜூலை 6 - கம்போங் புக்கிட் பியாதுவில் உள்ள ஒன்பது வயது சிறுவன் தனது மூத்த சகோதரனால் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்துள்ளான்.

காவல்துறையினர் தற்போது அந்த வழக்கை விசாரித்து வருவதாகவும், சம்பவம் குறித்து விரைவில் முழு அறிக்கையை வழங்குவார்கள் என்றும் மலாக்கா தெங்கா மாவட்டக் காவல் துறைத் தலைவர் ஏசிபி கிறிஸ்டோபரை  தொடர்பு கொண்டபோது இவ்வாறு கூறினார்.

14 வயதுடைய சந்தேக நபர் தற்போது காவல்துறையினர் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரியவருகிறது.

விசாரணைகளை பாதிக்கக்கூடிய அல்லது பாதிக்கப்பட்ட குடும்பத்தின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் தகவல்களை அல்லது ஊகங்களைப் பரப்ப வேண்டாம் என்று கிறிஸ்டோபர் பொது மக்களுக்கு அறிவுறுத்தினார்.

சந்தேக நபரின் அண்டை வீட்டார் ஒருவர் கடந்த சில நாட்களாக அந்நபர் வழகத்திற்கு மாறாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.