NATIONAL

நிலையான, வளமான மற்றும் வெற்றிகரமானதாக நிரூபிக்கப்பட்ட அரசாங்கத்திற்கு வாக்களிக்கவும் - மந்திரி புசார்

5 ஜூலை 2023, 10:28 AM
நிலையான, வளமான மற்றும் வெற்றிகரமானதாக நிரூபிக்கப்பட்ட அரசாங்கத்திற்கு வாக்களிக்கவும் - மந்திரி புசார்

ஷா ஆலம், ஜூலை 5: நிலையான, வளமான மற்றும் வெற்றிகரமானதாக நிரூபிக்கப்பட்ட அரசாங்கத்திற்கு வாக்களித்து அதனைத் தேர்ந் தெடுக்கும் பொறுப்பை சிலாங்கூர் மாநில மக்கள் நிறைவேற்ற வேண்டும் என்று டத்தோ மந்திரி புசார் கேட்டுக் கொண்டார். .

“இன்று எஸ்பிஆர், (தேர்தல் ஆணையம்) சிலாங்கூர் மற்றும் பிற ஐந்து மாநிலங்களுடன் இணைந்து மாநிலத் தேர்தலுக்கான முக்கிய தேதிகளை அறிவித்துள்ளது.

"நிலையான, வளமான மற்றும் வெற்றிகரமானதாக நிரூபிக்கப்பட்ட அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க சிலாங்கூர் மக்கள் அனைவரும் வாக்களிக்கச் செல்லுங்கள்" என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று முகநூலில்   கேட்டுக்கொண்டார்.

சிலாங்கூர், கெடா, கிளந்தான், திரங்கானு, பினாங்கு மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலத் தேர்தல்களுக்கான (பிஆர்என்) வாக்களிக்கும் நாளாக ஆகஸ்ட் 12 ஆம் தேதியை தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.

மேலும், ஆறு மாநிலங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் ஜூலை 29ம் தேதியும், ஆரம்ப வாக்களிப்பு ஆகஸ்ட் 8ம் தேதியும் இரண்டு வார பிரச்சார காலமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று புத்ராஜெயாவில் உள்ள ஆணையத்தின் தலைமையகத்தில் இருந்து நேரடியாக ஒளிபரப்பப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் எஸ்பிஆர் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கானி சலே இந்த விஷயத்தை அறிவித்தார்.

கெடா (36 இடங்கள்), கிளந்தான் (45 இடங்கள்), திரங்கானு (32 இடங்கள்), பினாங்கு (40 இடங்கள்), சிலாங்கூர் (56 இடங்கள்) மற்றும் நெகிரி செம்பிலானில் (36 இடங்கள்) போட்டியிடுகின்றன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.