NATIONAL

தீபகற்பத்தின் வடக்குப் பகுதியில் மேற்கு  நோக்கி பலத்த காற்று வீசக்கூடும் 

1 ஜூலை 2023, 10:00 AM
தீபகற்பத்தின் வடக்குப் பகுதியில்  மேற்கு  நோக்கி பலத்த காற்று வீசக்கூடும் 

கோலாலம்பூர், ஜூலை 1: தீபகற்பத்தின் வடக்குப் பகுதியில் உள்ள மாநிலங்களில் ஜூலை 5 ஆம் தேதி வரை பலத்த மேற்குக் காற்று  நோக்கி வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட மாநிலங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாக இன்று காலை 9 மணிக்கு மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.

" இந்நிலை பிற்பகல் முதல் இரவு வரை கிளந்தான் மற்றும் திரங்கானுவிலும் ஏற்படலாம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபூகெட் மற்றும் வடக்கு மலாக்கா கடற்பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படுவதற்கான எச்சரிக்கை ஜூலை 5 ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும் என மெட்மலேசியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களைப் பெற பொதுமக்கள் எப்போதும் www.met.gov.my இணையதளம் மற்றும் அனைத்து அதிகாரப்பூர்வ மெட்மலேசியா சமூக ஊடகங்களைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.