ANTARABANGSA

தென் தாய்லாந்தில் குண்டு வெடிப்பு- 4 பாதுகாப்பு படை வீரர்கள் காயம்

22 ஜூன் 2023, 3:47 AM
தென் தாய்லாந்தில் குண்டு வெடிப்பு- 4 பாதுகாப்பு படை வீரர்கள் காயம்

பட்டாணி, ஜூன் 22- தென் தாய்லாந்தின்

பட்டாணியில் நேற்று நிகழ்ந்த

குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாதுகாப்புப்

படையைச் சேர்ந்த 4 பேர்

காயமடைந்தனர்.

​​​பாதுகாப்புப் படையின் ஆறு

உறுப்பினர்கள் மூன்று மோட்டார்

சைக்கிள்களில் பொதுமக்களின்

குடியிருப்புகளைச்

சீரமைப்பதற்காக ஒரு கிராமத்திற்குச்

சென்ற போது இச்சம்பவம் நிகழ்ந்ததாகக்

கபோ மாவட்டக் காவல்துறையின்

தலைவர் கர்னல் போல் டெச்சாவுட்

செட்டேவிட் கூறினார்.

சம்பவ இடத்திற்கு அவர்கள் வந்தபோது

​​ஒரு வீட்டில், சொந்தமாகத்

தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்தது.

இச்சம்பவத்தில் ஒரு ரேஞ்சர் மற்றும்

மூன்று பாதுகாப்பு படை வீரர்கள்

காயமடைந்தனர். மற்ற இருவரும்

காயமின்றித் தப்பினர் என்று

பெர்னாமாவுக்கு அளித்த பேட்டியில்

அவர் சொன்னார் .

எரிவாயு சிலிண்டருடன் இணைக்கப்பட்டிருந்த 20 கிலோ எடையுள்ள நாட்டு வெடிகுண்டு

பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது திடீரென வெடித்ததாக அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.