NATIONAL

திறன் வாய்ந்த பணியாளர்களை உருவாக்க பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடனான ஒத்துழைப்பு – மாநில அரசு

21 ஜூன் 2023, 4:12 AM
திறன் வாய்ந்த பணியாளர்களை உருவாக்க பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடனான ஒத்துழைப்பு – மாநில அரசு

ஷா ஆலம், ஜூன் 21: தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறன் வாய்ந்த பணியாளர்களை உருவாக்க பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடனான ஒத்துழைப்பை மாநில அரசு தீவிரமாக நிறுவி வருகிறது.

சந்தையில் உள்ள மூலோபாயப் பகுதிகளின் தேவைகளுக்கு ஏற்ப தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில் பயிற்சி (TVET) சுற்றுச்சூழல் அமைப்பின் வளர்ச்சிக்குச் சிலாங்கூர் முக்கியத்துவம் அளிக்கிறது என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, கையெழுத்திடப்பட்ட ஒத்துழைப்புகளில் FESTO Pte லிமிடெட், மியூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (TUM) மற்றும் சீமென்ஸ் மலேசியா அடங்கும்  என்றார்  அவர்.

"மேலும், டசால்ட் சிஸ்டம்ஸ் உடனான ஒத்துழைப்பு செப்டம்பரில் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்வழி கார், விமானம் மற்றும் ரயில் துறைகளுடன் தொடர்புடையவற்றில்

இளைஞர்களுக்கு அதிக  வாய்ப்புகளை வழங்க இயலும்.

"எங்கள் பிரச்சனை என்னவென்றால், TVET இரண்டாவது தேர்வாக அல்லது பல்கலைக்கழகத்தில் நுழைய முடியாத மாணவர்களுக்கான இடமாக உள்ளது. அதனால்தான், விண்வெளி, கார் உற்பத்தி, மின்சாரம் மற்றும் மின்னணுவியல், தரவு மற்றும் மென்பொருள் மேலாண்மை மற்றும் கணினி நிரலாக்கம் போன்ற மூலோபாயத் துறைகளைப் பட்டதாரிகளால் நிரப்ப முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

இந்த நாட்டில் TVET துறையில் திறமையான பணியாளர்களை உருவாக்க வேண்டும் ஆனால், குறைந்த வருமானம் கொண்ட பணியாளர்களை உற்பத்தி செய்யும் போது அதற்கு நேர்மாறாக நடக்கிறது.

" நான் முதலீட்டாளர்களைச் சந்திக்கும் போது, அவர்கள் திறன்களைக் கொண்ட தொழிலாளர்களை விரும்புகிறார்கள், ஆனால் நம்மிடம் அது இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. எனவே அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் மற்றும் தரமான வருமானத்தை உருவாக்க வேண்டும் எனும் நோக்கத்தில் மலேசியாவில் இந்த சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குகிறோம்.

"சிலாங்கூர் பல்கலைக்கழகம் (UNISEL) சிலாங்கூரில் தேவையான தொழிலாளர் சந்தையைப் பூர்த்தி செய்ய TVET பல்கலைக்கழகமாகப் பயன்படுத்தப்படலாம்" என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.