கோலாலம்பூர், ஜூன் 13: கடந்த ஆண்டு 672 நீரோடைகளில் மொத்தம் 29 அல்லது 4 சதவீதம் மாசு அடைந்து இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹுவாங் தியோங் சிய் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் துறையின் (DOE) கண்காணிப்பின் அடிப்படையில் தரவுகள் வழங்கப்பட்டன. மேலும், நீர் தரக் குறியீடு (IKA) மாசுபாடு குறிக்கும் அளவில் இருப்பது கண்டறியப்பட்டது.
"இரசாயன கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகள், விலங்கு பண்ணைகள் மற்றும் சுரங்கங்கள் ஆகியவற்றால் ஏற்படும் நதி மாசுபாட்டைக் கையாள்வதில், சுற்றுச்சூழல் துறையின் மூலம் அமைச்சகம் அமலாக்கம், திட்டமிடல் மற்றும் ஆய்வு நிலைகள் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மலேசியாவில் உள்ள மாசுபட்ட நதிகளின் சமீபத்திய பட்டியல் மற்றும் நாட்டில் நதிகள் மாசுபடுவதைக் கையாள்வதில் அமைச்சகம் எவ்வளவு கண்டிப்பானது என்பது பற்றிய கேள்வி மற்றும் பதில் அமர்வின் போது டத்தோஸ்ரீ ஷீஷ் முகமது பூசி ஷ் அலியின் (பிஎன்-பெக்கன்) கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
சுற்றுச்சூழல் தரக் கண்காணிப்புத் திட்டத்தின் மூலம் நீரின் தரத்தைச் சுற்றுச்சூழல் துறை தொடர்ந்து கண்காணிக்கும் என்றும், நாடு முழுவதும் நதி நீர் தரக் கண்காணிப்பிற்காக 30 தானியங்கி கண்காணிப்பு நிலையங்கள் மற்றும் 1,353 மனித கண்காணிப்பு நிலையங்களும் உள்ளன என்றும் ஹுவாங் கூறினார்.
"இந்தப் பிரச்சினையைத் திறம்பட கையாள்வதற்கான, சுற்றுச்சூழல் அமைப்பின் சமநிலையை பேணுவதற்கான ஒரு அமலாக்க மூலோபாயத்தைத் திட்டமிடவும் ஒழுங்கமைக்கவும், நதிநீர் தரத்தின் கண்காணிப்பு தரவையும் மற்றும் தகவல்களின் பயன்பாட்டையும் அமைச்சகம் அதிகரிக்கும்.
"மேலும், ``மொத்த அதிகபட்ச தினசரி சுமை`` (டிஎம்டிஎல்) முறையின் மூலம் நதி மாசுபாட்டை கட்டுப்படுத்த புதிய அணுகுமுறையை அறிமுகப்படுத்துவதற்கான ஆய்வையும் அமைச்சகம் நடத்தி வருகிறது," என்று அவர் கூறினார்.
– பெர்னாமா








